search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ் டோனி"

    • எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது.
    • பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

    19 ஓவரில் சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் விக்கெட் கிடைத்தது. அடுத்து வந்த டோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது. ஒரு சிக்சர் அடிக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து லென்த் பாலாக வீசி டோனி சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற வகையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். மூன்றாவது பந்து, அதைவிட மோசம். லெக்சைடில் பந்து ஃபுல் டாஸ் ஆக வந்தது.

    அதை டோனி எளிதாக சிக்சருக்கு விரட்டினார். இது நிச்சயம் ஒரு மோசமான பந்துவீச்சு. ஒரு மோசமான கேப்டன்சி. என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது.
    • நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

    மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அது வித்தியாசம் என்பதை நிரூபித்தது. இது போன்ற மைதானத்தில் எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், நாங்கள் எங்கள் பந்து வீச்சின் திட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்து என நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளேயில் 60 ரன்கள் எடுத்திருக்கனும். எங்களுடைய மலிங்காவின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தேஷ்பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    ரகானேவுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால் தொடங்க வீரராக களம் இறக்கினால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். எந்த இடத்தில் களம் இறங்கினாலும் எனக்கு சரியானதுதான். அது ஒரு கேப்டனாக கூடுதலாக பொறுப்பு.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.
    • இதில் ஹாட்ரிக் சிக்சர் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிந்த நிலையில் ஓய்வு அறையை நோக்கி டோனி சென்று கொண்டிருந்த போது படியில் அவர் சிக்சர் அடித்த பந்து கிடந்தது. அதனை எடுத்து குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
    • இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.

    சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார்.

    இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

    சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

    இதுதொடர்பான காட்சிகளை டிரெஸ்சிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெற்ற ஆட்டநாயகன் விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
    • உமேஷ் யாதவ் என்னுடைய ரோல் மாடல். அவரை பார்த்து தான் வேகப்பந்து வீச்சை கற்றுக்கொண்டேன்.

    ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ- குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு செய்வது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அதனை தொடர்ந்து சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும் லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக யாஷ் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உமேஷ் யாதவ் என்னுடைய ரோல் மாடல். அவரும் நானும் ஒரே ஊர் தான். அவரை பார்த்து தான் வேகப்பந்து வீச்சை கற்றுக்கொண்டேன். அவருக்கு எதிராக விளையாடும் போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் அடக்கமானவர். இரவு 12 மணிக்கு அவரை அழைத்தாலும் அவர் எனக்கு உதவுவார்.

    எனது மற்றொரு ரோல் மாடல் எம்எஸ் டோனி. அவர் தனது போட்டிகளை பேட்டிங் மூலம் முடிப்பார், நான் அதை பந்தில் செய்ய விரும்புகிறேன்.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெற்ற ஆட்டநாயகன் விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் தற்போது இல்லை. ஆனால் நான் இந்த நிலைக்கு உயர்வதற்கு அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். இது அவரின் கனவும் கூட.

    இவ்வாறு யாஷ் கூறினார்.

    • இன்று சென்னையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது
    • சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது

    ஐபிஎல் 2024 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ஆனால் சேப்பாக்கத்துக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளில் சென்னை தோல்வியை தழுவியுள்ளது.

    அதே சமயம் கொல்கத்தா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இன்றைக்கு சென்னை அணிக்கு கொல்கத்தா கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இப்போட்டி தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது சமூக வலைத்தளங்களில் கம்பீர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கம்பிர் புகழ்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், "போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் நண்பர்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும். ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். எனவே அவரிடம் நீங்கள் கேட்டாலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்பதையே சொல்வார்.

    எம்.எஸ். டோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். குறிப்பாக 3 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியும் என்று நான் கருதவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் டோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    ஏனென்றால் டோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி கட்டுப்படுத்துவது? ஃபீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.

    அதே சமயம் சென்னை அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் திட்டம் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய டோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும்" என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

    • திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி.
    • டோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரித்தனர்.

    சென்னை:

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரேஜ் என்ற திரைப்படத்தை தயாரித்தனர்.

    இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது.

    இந்நிலையில், தமிழைத் தொடர்ந்து டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த நிறுவனத்தின் 2வது திரைப்படம் ஆகும்.

    இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான்.
    • உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒரு கேப்டனாக இருந்தாலும் அல்லது ஒரு வீரராக இருந்தாலும், எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். எங்கள் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், அது மிகவும் நல்லது.

    ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான். அத்துடன் எதிரணியின் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் மகேந்திர சிங் டோனியை போன்ற ஒருவரை என்னால் தந்திரமாக மிஞ்ச முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    அதனால் அவரை புத்திசாலித்தனமாக முந்த முயற்சி எதுவும் பண்ண மாட்டேன். டோனி ஒரு மகத்தான வீரர். எனவே உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே முழுமையாக வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    என்று கூறியிருக்கிறார்.

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
    • டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய டோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் டோனி பல சாதனைகளை படைத்துள்ளார். முதலாவதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டோனி 9 முறையும் ரோகித் 8 முறையும் ரிஷப் பண்ட் 6 முறையும் அடித்துள்ளனர்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதை தவிர ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20-வது ஓவர்களில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் விரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 57 சிக்சர்களுடன் பொல்லார்ட் 2-வது இடத்தில் உள்ளார்.

    • நேற்றைய போட்டியில் டோனி 16 பந்தில் 37 ரன் எடுத்தார்.
    • ஆட்டத்தின் கடைசி ஓவரில் டோனி 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் 2 ஆட்டத்தில் டோனி களம் இறங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆனால் விசாகப்பட்டினத்தில் சி.எஸ்.கே. மோதிய நேற்றைய 3-வது போட்டியில் டோனி களம் இறங்கி தனது அதிரடியான ஆட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சி.எஸ்.கே. தோற்றாலும் டோனியின் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

    23 பந்தில் 72 ரன் தேவை என்ற கடினமான நிலையில் இருந்த போதுதான் டோனி 8-வது வீரராக களம் வந்தார். முகேஷ்குமார் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கேட்சில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த ஓவரில் கலீல் அகமதுவின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

    3 சிக்சர்கள் மூலம் டோனி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த கோலியை முந்தினார். டோனி 242 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கோலி 241 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டோனியை கோலி முந்தினார். தற்போது அவரை டோனி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலியோ முதல் வரிசையில் ஆடுகிறார். ஆனால் டோனி களத்தில் இறங்கும் வாய்ப்பு அரிதாகவே இருக்கிறது.

    கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • சிஎஸ்கே 20 ரன்னில் தோல்வியடைந்தது.
    • டோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

    எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    வெற்றியோ... தோல்வியோ... டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் விளாசினார்.

    மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ... அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது.

    • டெல்லி அணியின் பிரித்வி ஷா விக்கெட்டை டோனி கேட்ச் பிடித்து அசத்தினார்.
    • விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார்.

    விசாகப்பட்டினம்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி, 17 சீசனில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா விக்கெட்டை கேட்ச் பிடித்து அசத்தினார் டோனி. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் மூலம் விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். இதுவரை 213 கேட்சுகளும், 87 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 274 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், 270 விக்கெட்டுகளுடன் டி காக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ×